முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 169 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 169 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 24 காவலர்கள் உயிரிழந்தனர்.

Updated On : 27 செப்டம்பர், 2020 at 3:52 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 169 காவலர்களுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 169 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 24 காவலர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 169 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 22,629-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றிலிருந்து 3,190 காவலர்கள் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 காவலர்கள் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.