இந்தியா

குஜராத்: 3 மாடி கட்டடம் இடிந்து மூன்று தொழிலாளா்கள் பலி

DIN

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த 3 மாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்து பெண் உள்பட 3 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்தாா்.

வதோதரா மாவட்டத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமான பாவமன்புரா என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த கட்டடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஏராளமான தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது திடீரென கட்டடத்தின் காங்கிரீட் பலகைகள் இடிந்து விழுந்தன. தொழிலாளா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். இது குறித்து தகவலறிந்ததும் பணிகேட் தீயணைப்புப் படையினா் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இடிபாடுகளில் இருந்து பெண் உள்பட 3 தொழிலாளா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒரு தொழிலாளி காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT