முகப்பு
இந்தியா

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி காலமானார்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியான தாதி ஜானகி காலமானார். அவருக்கு வயது 104.

Updated On : 27 மார்ச் 2020, 4:28 pm IST
பகிர்:


மௌண்ட் அபு: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியான தாதி ஜானகி காலமானார். அவருக்கு வயது 104.

ராஜஸ்தானின் மௌண்ட் அபுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதி ஜானகி இன்று அதிகாலை 2.10 மணியளவில் காலமானார்.

அவர் கடந்த இரண்டு மாதங்களாக மூச்சுத் திணறல் மற்றும் வயிறு சம்பந்தமான உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

உலகம் முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தொடர்ந்து ஆன்மிகப் பணிகளை செய்து வந்த தாதி ஜானகி, இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராகவும் பணியாற்றியவர்.

Advertisement

Advertisement

ராஜஸ்தானில் உள்ள பிரம்மகுமாரிகள் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தாதி ஜானகியின் உடல், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் மத்திய அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, தாதி ஜானகியின் இறுதிச் சடங்குகளை பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.