ஜன. 6 முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை: ஹர்தீப் சிங்
இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் இரு நாடுகளும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கால அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.