முகப்பு
இந்தியா

ஜன. 6 முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை: ஹர்தீப் சிங்

இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி 2021, 3:32 pm IST
ஜன. 6 முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை: ஹர்தீப் சிங்
பகிர்:

இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி  முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் இரு நாடுகளும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கால அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments