ஒடிசா: ஐஐஎம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி
ஒடிசாவில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இன்று (ஜன.2) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஒடிசாவில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இன்று (ஜன.2) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது, இன்று தொடங்கப்படும் சிறு தொழில்கள் நாளைய பெருநிறுவனங்களாக உருவாகின்றன. பெரும்பாலான சுய தொழில்கள் இரண்டு, மூன்று நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுகிறது. வேளாண்மை முதல் விண்வெளி ஆய்வு வரை சுயதொழில் தொடங்குவதர்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பலர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.