முகப்பு
இந்தியா

குடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Updated On : 2 ஜனவரி 2021, 3:23 pm IST
குடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு
பகிர்:

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.

Advertisement

Advertisement

மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தில்லியில் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என தெரிவித்தனர். இந்தப் பேரணியில் தில்லியைச் சுற்றியுள்ள மாநில விவசாயிகள் கலந்து கொள்ளவும், நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்களின் சார்பில் குடும்பத்திற்கு ஒருவரும் கலந்து கொள்ளவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments