முகப்பு
இந்தியா

40 ஆவது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்: இன்று 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 40 ஆவது நாளை எட்டியுள்ளது. 

Updated On : 4 ஜனவரி 2021, 1:14 pm IST
விவசாயிகளின் போராட்டம்
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 40 ஆவது நாளை எட்டியுள்ளது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. 

Advertisement

Advertisement

குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சனிக்கிழமை இரவு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் தில்லி எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.