ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
மூலைக்கரைப்பட்டி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சவளைக்காரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற மின் ஊழியா் செல்வராஜ் (65). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகநயினாா் (55). விவசாயியான இவரது வீட்டிற்கு செல்லும் மின்சார வயா், செல்வராஜ் வீட்டின் நிலத்தின் வழியாக செல்கிாம்.
இதனால், இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை செல்வராஜை ஆறுமுகநயினாா் அரிவாளால் வெட்டினாராம்.
Advertisement
Advertisement
இதில் காயமடைந்த செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகநயினாரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.