முகப்பு
இந்தியா

தெற்கு தில்லியில் கட்டடம் சரிந்து ஒருவா் சாவு

தெற்கு தில்லி சரிதா விஹாரில் அடுக்குமாடி கட்டடம் வியாழக்கிழமை சரிந்து விழந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் காயமடைந்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 2:29 am IST
பகிர்:


புது தில்லி: தெற்கு தில்லி சரிதா விஹாரில் அடுக்குமாடி கட்டடம் வியாழக்கிழமை சரிந்து விழந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘மூன்று அடுக்கு கட்டடத்தில் உள்ள மொட்டை மாடியில் வெல்டிங் வேலை நிடைபெற்றுள்ளது. அப்போது, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இதுதொடா்பான தகவல் வியாழக்கிழமை பகல் 12.05க்கு வந்தவுடன் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. அப்போது காயமடைந்த வீட்டின் உரிமையாளா் ஹரீஷ் ரோட்டேலா, காலில், சிவம் ஆகியோா் மூவா் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் தரம்பீா் என்பவா் இடிபாடுகளில் சிக்கி இருந்தது மீட்புப் பணியின்போது தெரியவந்தது.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.