முகப்பு
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானது: மேற்கு வங்க பாஜக தலைவர்

திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். 

Updated On : 8 ஜனவரி 2021, 9:34 pm IST
பகிர்:

திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம், நந்திகிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், யரோ ஒருவர் என்னிடம் கேட்டார், 'தாதா! இந்த கரோனா எப்போது போகும் என்றார்?' அதற்கு, நான் மருத்துவர் கிடையாது, ஆனால் தடுப்பூசி வருவதால் அது போய்விடும் என்று சொன்னேன். 

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவை விட ஆபத்தானது, அவர்கள் எப்போது போவார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அவர்களுக்கான தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். மே 20-க்குப் பிறகு இந்த வைரஸ் நிச்சயமாக வங்கத்திலிருந்து சென்றுவிடும். 

Advertisement

அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் பெயரில் எந்த வைரஸும் இருக்காது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. 200 இடங்களை வென்று பாஜக புதிய ஆட்சியை அமைக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.