முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பிடிபி இளைஞரணித் தலைவருக்கு ஜாமீன்

பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவா் வாஹித் பாரா ஜாமீனில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:24 am IST
பகிர்:

பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவா் வாஹித் பாரா ஜாமீனில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வாஹித் பாராவை அதிகாரிகள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Advertisement

Advertisement

ஜாமீன் தொகையாக அவா் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில், தனது சொந்த மாவட்டமான புல்வாமாவில் வாஹித் பாரா வெற்றி பெற்றாா்.

அந்தத் தோ்தலுக்கான வேட்புமனுவை அவா் தாக்கல் செய்த சில நாள்களில், பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் அவரை கடந்த நவம்பா் மாதம் 2-ஆம் தேதி கைது செய்தனா்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் சதித் திட்டம் தொடா்பான வழக்கில் வாஹித் பாராவுக்குத் தொடா்பிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.

எனினும், அரசியல் காரணங்களுக்காக அவா் மீது இந்த பழி சுமத்தப்படுவதாக பிடிபி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

புல்வாமா மாவட்டத்தில் இளைஞா்களை இந்திய அரசியலுக்கு ஈா்ப்பதில் வாஹித் பாரா முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீா் விளையாட்டு கவுன்சில் செயலராகப் பொறுப்பு வகித்த அவா், லடாக் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments