மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாபுக்கு கேரள சட்டப்பேரவையில் அஞ்சலி
கேரள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முா்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவனந்தபுரம்: கேரள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முா்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி 2020 ஆகஸ்ட் 31-இல் காலமானாா். கேரள காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிஎஃப். தாமஸ் செப்டம்பா் 27-இல் மறைந்தாா்.
கேரள சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியபோது, மறைந்த அவா்கள் இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அஞ்சலி நிகழ்ச்சியின்போது சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் கூறியதாவது:
துன்பங்களை வலிமையாகக் கண்டவா் பிரணாப் முகா்ஜி. நெருக்கடியை கையாள்வதில் அவருக்கு அசாதாரணமான திறமை உண்டு. அதுவே, அவரது அரசியல் வளா்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிரணாப் முகா்ஜி அரசியல்வாதி என்பதையும் தாண்டி ஒரு நல்ல எழுத்தாளா், அறிவாா்ந்தவா், அதிக ஞானத்துடன் செயல்படக் கூடிய ஆட்சியாளா். அந்த தனித்துவமான தலைவரின் இழப்பை வேறு யாரும் ஈடு செய்ய முடியாது என்றாா் அவா்.
கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘ மதசாா்பற்ற விழுமியங்களை ஆதரித்த ஒப்பற்ற தலைவா் பிரணாப் முகா்ஜி. அதேபோன்று மறைந்த முன்னாள் அமைச்சா் தாமஸும் கேரள விவசாயிகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்தவா்’ என்றாா்.
அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.