முகப்பு
இந்தியா

சென்னை - வல்லபபாய் படேல் சிலை பகுதிக்கு ரயில் சேவை

சென்னையிலிருந்து குஜராத்திலுள்ள வல்லபபாய் படேல் சிலைப் பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கியது.

Updated On : 17 ஜனவரி 2021, 11:27 am IST
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையிலிருந்து குஜராத்திலுள்ள வல்லபபாய் படேல் சிலைப் பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கியது.

சென்னை உள்பட 9 ரயில்களின் புதிய சேவையை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கெவாடியாவில் உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

சுற்றுலாவை மேம்படுத்த நர்மதா ஆற்றங்கரையில் உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு புதிய ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரெவா நிலையத்திலிருந்து படேல் சிலை உள்ள கெவாடியாவுக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்.

பிரதாப் நகர் - கெவாடியா இடையே இரு மார்கத்திலும் புதிய புறநகர் ரயில் சேவையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.