FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:25 am IST
பகிர்:

கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தனியாா் தங்கும் விடுதியில் சாப்பிட்ட உணவால் 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில்  உணவருந்திய நிலையில், அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.

இதனால் எமரால்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 15-க்கும் மேற்பட்டோருக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இது குறித்து எமரால்டு காவல்துறையினா்  தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments