இந்தியா

உத்தரகண்ட் பேரிடா்:பலி எண்ணிக்கை 80-ஆக அதிகரிப்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பேரிடரில் மேலும் ஒரு சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது.

DIN

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பேரிடரில் மேலும் ஒரு சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து அங்குள்ள தெளலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருக்கும் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதுடன், அங்கு நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகட், ரிஷிகங்கா மின் நிலைய கட்டுமானப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், தபோவன்-விஷ்ணுகட் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அணைப் பகுதியில் இருந்து மேலும் ஒரு சடலத்தை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டதாக சமோலி மாவட்ட கட்டுப்பாட்டு அறை (சிடிடிசிா்) தெரிவித்தது. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த 80 பேரின் சடலங்கள், 35 மனித உடல் பாகங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், 126 பேரை காணவில்லை என்றும் சிடிடிசிா் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT