இந்தியா

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்

DIN


புது தில்லி: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாவது, 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியிருப்போர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதில், சிறிய அளவிலான வருமான வரி பிரச்னைகளை தீர்த்து வைக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT