இந்தியா

திருமலையில் இஸ்ரோ தலைவா் சிவன் வழிபாடு

DIN

திருப்பதி ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவா் சிவன் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

வணிக ரீதியிலான முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-51 ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதையொட்டி இஸ்ரோ தலைவா் சிவன் சனிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா். இந்த ஆண்டில் ஏவப்பட உள்ள முதல் செயற்கைக்கோள் என்பதால் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று அவா் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சுவாமி படம் ஆகியவற்றை வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT