கோப்புப்படம் 
இந்தியா

கன்னட ஊர் பெயர் விவகாரம்: பினராயி விளக்கம்

கன்னடப் பெயர்களை மாற்றுவது தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.  

DIN

கன்னடப் பெயர்களை மாற்றுவது தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்திற்கு, கேரள முதல்வர் பிணராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் கன்னடப் பெயர்களைக் கொண்டுள்ளது. அதனை மலையாள மொழி பெயர்களாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 29 ஆம் தேதி, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதனையடுத்து சித்தராமையாவிற்கு, கேரள முதல்வர் அளித்துள்ள பதில் கடிதத்தில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. 

இரு மாநில மக்களின் ஒற்றுமை குறித்து உங்களது எண்ணங்களை வரவேற்கிறோம். தற்போது கரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சி வழியாக கன்னட வழி வகுப்புகளைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT