கஜேந்திர சிங் ஷெகாவத் 
இந்தியா

மேக்கேதாட்டு விவகாரம்: 'இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும்'

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கும் நியாயம் கிடைக்கும், கர்நாடகத்திற்கும் நியாயம் கிடைக்கும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளார். 

DIN

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கும் நியாயம் கிடைக்கும், கர்நாடகத்திற்கும் நியாயம் கிடைக்கும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளார். 

இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன் பிறகு அமைச்சர் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று கூறினார். 

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் கருத்தும் கேட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT