திருச்சி சிவா(கோப்புப்படம்) 
இந்தியா

பெகாஸஸ்: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது திமுக

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுகவின் திருச்சி சிவா திங்கள்கிழமை அளித்தார். 

ANI

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுகவின் திருச்சி சிவா திங்கள்கிழமை அளித்தார். 

இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரது தொலைபேசியை ஒட்டிக் கேட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இன்று பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக சார்பில் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளார்.

அதேபோல, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மணீஸ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கியுள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT