இந்தியா

பாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர்

DIN

தெலங்கானா முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எட்டலா ராஜேந்தர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டடார். 

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னதாக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

இதையடுத்து இன்று அவர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அவரை கட்சிக்கு வரவேற்ற அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  அடுத்த பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தெலங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்றார். . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT