முகப்பு
இந்தியா

'பெட்ரோல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையே காரணம்'

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். 

Updated On : 23 ஜூன், 2021 at 11:56 AM
தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)
பகிர்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கச்சா எண்ணெய் விலையே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.

80 சதவிகித எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

Advertisement

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரை தாண்டியுள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.