FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மூன்றாம் அலை? கம்மம் பகுதியில் 21 நாள்களில் 1,400 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

கரோனா மூன்றும் அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலைடியில், அது கம்மம் பகுதியில் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Updated On : 23 ஜூன் 2021, 11:43 am IST
மூன்றாம் அலை? கம்மம் பகுதியில் 21 நாள்களில் 1,400 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு
பகிர்:


கம்மம்: கரோனா மூன்றும் அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலைடியில், அது கம்மம் பகுதியில் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் சமீப நாள்களாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 800 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் இது கடந்த ஜூன் மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 21ஆம் தேதி வரை மட்டும் ஜூன் மாதத்தில் 1,480 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், அங்கு புதிதாகத் திறக்கப்பட்ட குழந்தைகளுக்கான கரோனா மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments