இந்தியா

மூன்றாம் அலை? கம்மம் பகுதியில் 21 நாள்களில் 1,400 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

ENS


கம்மம்: கரோனா மூன்றும் அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலைடியில், அது கம்மம் பகுதியில் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் சமீப நாள்களாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 800 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் இது கடந்த ஜூன் மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 21ஆம் தேதி வரை மட்டும் ஜூன் மாதத்தில் 1,480 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், அங்கு புதிதாகத் திறக்கப்பட்ட குழந்தைகளுக்கான கரோனா மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT