நாட்டில் கரோனா 2வது அலைக்கு 776 மருத்துவர்கள் பலி
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு, நாட்டில் இதுவரை 776 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு, நாட்டில் இதுவரை 776 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை 3,93,310 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,
நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது இதுவரை மொத்தம் 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.
அதில் அதிகபட்சமாக பிகாரில் 115, தில்லியில் 109, உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.