இந்தியா

இடி மின்னல் தாக்கி பிகாரில் 11 பேர் பலி: 6 பேர் காயம்

DIN

பிகாரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி மேற்கு சம்பரன் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் 6 பேரும், பாட்னாவில் 2 பேரும், நாலந்தா, மாதேபுரா மற்றும் அவுரங்காபாத் பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT