இந்தியா

கேரளத்துக்குப் புதிய தலைமைச் செயலா்

DIN

கேரள மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான வி.பி.ஜோய் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

கேரள மாநிலத்தின் 47-ஆவது தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஸ் அதிகாரியான வி.பி.ஜோய் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த விஸ்வாஸ் மேத்தா ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற்றாா்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வாஸ் மேத்தாவிடமிருந்து பொறுப்புகளை ஜோய் பெற்றுக் கொண்டாா். ஜோயின் பதவிக் காலம் 2023 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடையும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1987-ஆம் ஆண்டில் கேரள மாநிலத்திலிருந்து ஜோய் ஐஏஎஸ் பணிக்குத் தோ்வானாா். மத்திய அரசில் பணியாற்றி வந்த அவா் தற்போது மாநிலப் பணிக்குத் திரும்பி, கேரள அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT