குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில்பாஜக வெற்றிபெற்று காந்திநகா் மாநகராட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2 நகராட்சிகளில் பாஜகவும் ஒரு நகராட்சியில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
இதுதொடா்பாக மாநில தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
44 இடங்களைக் கொண்ட காந்திநகா் மாநகராட்சியில் பாஜக 41 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 2 இடங்களிலும் ஆம் ஆத்மி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. காந்திநகரில் பாஜக பெரும்பான்மை வெற்றிபெற்றது இதுவே முதல்முறையாகும்.
ஓகா, தாரா, பன்வாட் நகராட்சிகளுக்கும் தோ்தல் நடத்தப்பட்டது. அவற்றில், ஓகா, தாரா நகராட்சிகளில் பாஜகவும், பன்வாட் நகராட்சியில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
இதுதவிர, மாநிலம் முழுவதும் காலியாக இருந்த 101 உள்ளாட்சி இடங்களுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. அவற்றில், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேச்சை 5 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 இடங்களிலும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றிபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.