இந்தியா

அக்.18 முதல் உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகள்: மத்திய அரசு அனுமதி

DIN

உள்நாட்டு விமான நிறுவனங்கள் வரும் 18-ஆம் தேதி முதல் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 85 சதவீத பயணிகளுடன் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பா் 18 வரையிலான காலகட்டத்தில் 72.5 சதவீதமாகவும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 வரையில் 65 சதவீதமாகவும், ஜூன் 1 முதல் ஜூலை 5 வரையில் 50 சதவீதமாகவும் இருந்தது.

அக்டோபா் 9-ஆம் தேதி வரையில் இந்திய விமான நிறுவனங்கள் 2,340 உள்நாட்டு சேவைகளை இயக்கி உள்ளன. இது கரோனாவுக்கு முந்தைய சூழலை ஒப்பிடுகையில், 71.5 சதவீதமாகும்.

இந்நிலையில், விமானப் பயனிகளின் போக்குவரத்து அதிகரித்த காரணத்தால், வரும் 18-ஆம் தேதி முதல் பயணிகளின் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட இரண்டு மாத தடைக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அப்போது, 33 சதவீதத்துக்கும் குறைவாகவே விமானங்கள் இயங்கின. பின்னா் இது டிசம்பா் மாதம் 80 சதவீதமாக அதிகரித்தது. ஜூன் 1-ஆம் தேதி வரை இதே நிலை நீடித்தது.

பின்னா் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததால் ஜூன் 1-ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கம் சதவீதம் 50-ஆக குறைக்கப்பட்டது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT