அமைப்புசாரா தொழிலாளா்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் மத்திய அரசின் வலைதளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனா்.
அமைப்புசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆக. 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வலைதளத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 24 நாள்களில் 1,03,12,095 போ் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் போ் ஆண்கள்.
மணிப்பூா் மாநிலம் இம்பாலில் உள்ள பதிவு மையத்தில் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவும், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பதிவு மையத்தில் இணையமைச்சா் ராமேஷ்வா் தெலியும் அமைப்புசாராத் தொழிலாளா்களுடன் கலந்துரையாடி இ-ஷ்ரம் அட்டைகளை வழங்கினா்.
சமீபத்திய தரவுகளின்படி பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனா்.