கோப்புப்படம் 
இந்தியா

ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய பள்ளி மாணவர் கைது

தில்லியில் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கிய பள்ளி மாணவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

ANI

தில்லியில் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கிய பள்ளி மாணவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

தில்லி பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

அங்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவர்(வயது 21), ஆசிரியர் விக்ராந்தை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். உடனடியாக விக்ராந்தை மீட்ட சக ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரன்ஹோலா காவல் நிலைய அதிகாரிகள் மாணவரை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT