திருப்பதியில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம் 
இந்தியா

திருப்பதியில் தரிசனம் செய்ய தடுப்பூசி கட்டாயம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

DIN

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ்பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்ய இங்கு வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 3 நாள்களுக்கு முன்னர் மேற்கொண்ட கரோனா பரிசோதனையை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT