ட்விட்டர் : பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுக்க இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் ட்விட்டர் முதன்மையான பங்களிப்பை செய்து வருகிறது.
முக்கியமான அறிவிப்புகள் ,செய்திகள் எல்லாம் முதலில் ட்விட்டரில் பதிவு செய்தபின் தான் மற்ற வலைத்தளங்களுக்கு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது . இந்தியாவில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்டவரும் மோடிதான் என்பதால் தற்போது ட்விட்டரில் #CongratsModiJiFor70M என்கிற ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பிரதமா் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு
உலகளவில் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் பராக் ஒபாமா. 12.9 கோடி பேர் அவரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.