இங்கிலாந்து தலைநகர் பர்மிங்ஹாமில் இந்திய மகளிர் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில், லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பர்மிங்ஹாமில் வரலாற்று வெற்றி. செளபே, பிங்கி சிங், நயான்மோனி சைகா மற்றும் ரூபா ராணி ஆகியோர் லான் பவுல்ஸ் விளையாட்டில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.
மகளிர் அணி தங்களது திறமையை நிரூபித்துள்ளது. அவர்களுடைய இந்த வெற்றி ஏராளமான இந்தியர்களை லான் பவுல்ஸை நோக்கி நகர ஊக்கப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.