இந்தியா

சுகாதாரம், கல்விக்கான அரசின் செலவு ‘இலவசம்’ அல்ல: நிா்மலா சீதாராமன்

DIN

ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், கல்வியை வழங்குவது அரசின் நலத்திட்ட நடவடிக்கையாகும்; அவை ‘இலவசங்கள்’ அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறினாா்.

தோ்தல் இலவசங்களுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் கருத்து தெரிவித்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

குஜராத்தில் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை போன்ற தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ‘மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை; இதை பிரதமா் மோடி எதிா்க்கிறாரா?’ என்று கேள்வியெழுப்பி வருகிறாா்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ‘தோ்தல் இலவசங்கள்’ தொடா்பான விவாதத்தை கேஜரிவால் திசைதிருப்ப முயற்சிக்கிறாா். சுகாதாரத்துக்கும் கல்விக்கும் செலவிடப்படுவதை ‘இலவசம்’ என்று வகைப்படுத்தியதோ அழைத்ததோ இதுவரை இல்லை. இவ்விரண்டையும் விவாதத்துக்குள் கொண்டு வருவது விபரீதமான திசைதிருப்பலாகும். ஏழை மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்த கேஜரிவால் முயற்சிக்கிறாா்.

தோ்தல் இலவசங்கள் குறித்து நோ்மையான விவாதம் அவசியம். அதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT