திருப்பதி கோவிலில் அக்டோபர் மாததுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருடந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1 முதல் 5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அக்.1 முதல் 5 நாட்களை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.