பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் பறந்து வந்த  வெடிபொருள்கள்; உளவாளி சுட்டுக்கொலை 
இந்தியா

பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் பறந்து வந்த  வெடிபொருள்கள்; உளவாளி சுட்டுக்கொலை

பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட டிரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

PTI


ஜம்மு: பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட டிரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் பயங்கரவாதிகளின் உளவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, காவல்துறையிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

டிரோன் மூலம் வந்த வெடிபொருள் பார்சலை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு திறந்தபோது, அதில் ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT