இந்தியா

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் பலி

DIN

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஆகஸ்ட் 22-ம் தேதி திகார் மத்தியச் சிறை எண் 5ல் உள்ள கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. 

கைதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதில், கைதி சமீர் கானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திடீரென அவர் சரிந்து விழுந்தார். 

உடனே அவர் சிறை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் டிடியூ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவர்களின் மோதல் காட்சி அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

உயிரிழந்த 20 வயதான சமீர் பலாஸ்வா பால் பண்ணை பகுதியில் வசிப்பவர். அவர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மெட்ரோபாலிட்டன் நீதிபதியால் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT