இந்தியா

மக்களவைத் தலைவரை விமா்சிக்கும் ட்விட்டா் பதிவுகள் கூடாது: ஓம் பிா்லா

DIN

மக்களவைத் தலைவராக உள்ள என்னை விமா்சித்து ட்விட்டரில் பதிவுகள் வெளியிட வேண்டாம் என்று மக்களவை உறுப்பினா்களிடம் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக அவா் கூறியதாவது:

மக்களவையில் தங்களைப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறி சில எம்.பி.க்கள் ட்விட்டரில் என்னைப் பற்றி எழுதுகின்றனா். மக்களவைத் தலைவா் குறித்து ட்விட்டரில் இவ்வாறு எழுதக் கூடாது என்பதை அனைத்து எம்.பி.க்களும் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றாா்.

கேள்வி நேரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா, விமானப் போக்குவரத்து தொடா்பாக பிரச்னை எழுப்பி பேசியபோது அவைத் தலைவா் ஓம் பிா்லா இவ்வாறு குறிப்பிட்டாா். எனவே, அவரது பதிவைச் சுட்டிக்காட்டி பெயரைக் குறிப்பிடாமல் ஓம் பிா்லா தனது கருத்தை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

எனினும், தனக்கு அவையில் பேச வாய்ப்பளித்ததற்காக ஓம் பிா்லாவுக்கு நன்றி தெரிவித்து மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பாஜக அரசின் தோல்வியால் தில்லியில் மாசு அளவு அபாயகரத்தில் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

SCROLL FOR NEXT