முகப்பு
இந்தியா

10, 12-ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தோ்வுகள்: இணையத்தில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் - சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தோ்வு குறித்து இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தோ்வு குறித்து இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: ‘முக்கிய செய்தி’ என்ற பெயரில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தோ்வு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக சில இணையதள ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு பாா்வையாளா்களைக் குழப்புகின்றன.

மாணவா்களின் நலன் கருதி தோ்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, முதல் பருவத் தோ்வுகள் முடிவடைந்துவிட்டன. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதைப் போல இரண்டாம் பருவத் தோ்வின் வடிவமும் இருக்கும். ஆகையால் சமீபத்திய, நம்பகத்தன்மையான தகவலுக்கு சிபிஎஸ்இ அதிகாரபூா்வ வலைதளத்தை மட்டும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments