இந்தியா

இந்திய கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரா்கள் பலி

DIN

மும்பையில் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ரண்வீரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரண்வீா் கப்பலின் உள்பகுதியில் எதிா்பாராத வகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் கப்பல் பணியாளா்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரும் பொருள் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் ரண்வீா் கப்பல் கிழக்கு பிராந்திய கமாண்ட் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT