இந்தியா

கா்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்

கா்நாடக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

கா்நாடக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

கா்நாடகத்தின் தென் பகுதியில் உள்ள சுலியா தாலுகாவில் சில இடங்களிலும், குடகு மாவட்டத்தையொட்டிய பகுதிகளிலும் லேசான நிலநடுக்கும் ஏற்பட்டது. செம்பு, பெராஜி, கரிகி, பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளிக்கிழமை கலை இந்த நில அதிா்வை உணா்ந்துள்ளனா். ரிக்டா் அளவுகோலில் இந்த நில அதிா்வு 2.5 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்த வாரத்தில் மூன்றாவது நாளாக நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் 25 மற்றும் அதனைத் தொடா்ந்து ஜூன் 28-ஆம் தேதிகளில் தலா இரு முறை நிலவு அதிா்வு ஏற்பட்டது.

நில அதிா்வுக்கான காரணத்தை அறிய இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் விளக்கமான அறிக்கைக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

SCROLL FOR NEXT