இந்தியா

சகவீரா்கள் மூவரை சுட்டு ஐடிபிபி வீரா் தற்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் சகவீரா்கள் மூவரை சுட்ட பின், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ஐடிபிபி) படை வீரா் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுதொடா்பாக மூத்த ஐடிபிபி அதிகாரி கூறியதாவது:

உதம்பூா் மாவட்டத்தில் உள்ள முகாமில் ஐடிபிபியின் ஒரு தலைமைக் காவலரையும் இரு காவலா்களையும் பூபேந்திர சிங் என்ற மற்றொரு காவலா் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டாா். அதன் பின்னா், அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். காயமடைந்த வீரா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் உயிருக்கு ஆபத்தில்லை. எதனால் இந்தச் சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT