இந்தியா

கேரளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அருகே இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான். 

PTI

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அருகே இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான். 

பெரும்பாவூரில் இரண்டு மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. வீடு இடிந்து விழும்போது சிறுவன் மற்றும் அவனது தாத்தா மேல் தளத்தில் இருந்துள்ளனர். 

இதன் விளைவாக அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார். 

வீடு இடிந்து விழும் சமயத்தில் வீட்டில் 6-7 பேர் இருந்ததாகவும், ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். 

மேலும், வீடு இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

SCROLL FOR NEXT