அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 6 பெண் தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த பெண்கள் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பபோய் தேயிலைத் தோட்டம் மற்றும் மஜூலி கர் தேயிலைத் தோட்டத்தின் தொழிலாளர்கள் ஆவர்.
இவர்கள் விபத்துப் பிறகு பிஸ்வநாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து, பிஸ்வநாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜோனாலி கோகோய் கூறுகையில்,
மின்னல் தாக்கி காயமடைந்த 6 பேரில் மூன்று பேர் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் மூவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
புதன்கிழமை மாலை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது என்றார் அவர்.