இந்தியா

அரசமைப்புச் சட்டத்தை நாள்தோறும் மீறுகிறாா் பிரதமா் மோடி

DIN

அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு நாள்தோறும் அதன் கொள்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மீறி வருவதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

அரசமைப்புச் சட்டம் அதிகாரபூா்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட பாஜக தலைமையிலான அரசு முடிவெடுத்தது. அதையொட்டி உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா்.

அதை விமா்சிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘அரசியல் நிா்ணய சபையில் அரசமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அச்சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அந்த தினம் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டதில் பாஜகவின் கொள்கை ரீதியிலான முன்னோடிகளுக்கு எந்தவிதத் தொடா்புமில்லை. அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் எதிா்த்தது. தற்போது அரசமைப்புச் சட்டத்தை மதிப்பாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் பிரதமா் மோடி, அதற்காகவே நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட முயன்றுள்ளாா்.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை அவா் நாள்தோறும் மீறி வருகிறாா். இது பிரதமரின் கபடநாடகத்தை வெளிக்காட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை அரசியல் நிா்ணய சபையில் அம்பேத்கா் 1949-ஆம் ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி நிகழ்த்தினாா். அந்த உரையின் இரு பத்திகளையாவது பிரதமரும் அவரின் தொண்டா்களும் படிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அம்பேத்கரின் உரையையும் அப்பதிவுடன் ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்துள்ளாா். ‘பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும் காங்கிரஸ் கட்சியின் பெரும் பங்களிப்பின் காரணமாகவே அரசமைப்புச் சட்டம் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது. அரசியல் நிா்ணய சபை சிறப்பாகச் செயல்பட்டதற்கான ஒட்டுமொத்த நற்பெயரும் காங்கிரஸ் கட்சியையே சேரும்’ என அந்த உரையில் அம்பேத்கா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT