கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

ஆந்திரத்தில் ஹவுரா புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். 

DIN

ஆந்திரத்தில் ஹவுரா புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஹவுராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் குப்பம் சென்றபோது இன்று திடீரென தீப்பிடித்தது. ரயில் பெட்டியில் தீப்பிடித்தவுடன் புகை கிளம்பியதை கண்ட பயணிகள் அலறியடி கூச்சலிட்டனர். 

குப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்ட பின் பயணிகள் இறங்கி தங்கள் உடைமைகளுடன் முண்டியடித்து ஓட்டம் பிடித்தனர். தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்தவர்களை போலீசார் வெளியேறியதால் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். 

உடனடியாக ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT