அகமதாபாத்: குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொங்கு பாலத்திற்கு தர சான்றிதழ் பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.
கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு (அக். 26) குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதையும் படிக்க | கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம்
இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.”
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் ராஜ்கோட் தீயணைப்பு படையின் 6 படகுகள், 6 ஆம்புலன்ஸ்கள், 2 மீட்பு வேன்கள் மற்றும் 60 ராணுவ வீரர்கள் மற்றும் பரோடா, அகமதாபாத், கோண்டல், ஜாம்நகர், கட்ச் ஆகிய இடங்களில் இருந்து 20 மீட்புப் படகுகள், 12 தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வேன்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தர சான்றிதழ் இல்லை: இந்நிலையில், மோர்பியில் தொங்கு பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் திறப்பதற்கான் அரசிடம் அனுமதியும், பாலத்தின் உறுதித்தன்மைக்கான சான்றிதழும் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோக சம்பவத்தை போல், மோர்பியில் 1979 ஆம் ஆண்டு அணை உடைந்ததில் 3,000 பேர் இறந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.