ஏப். 28-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடி
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அசாம் மாநிலம் திபு பகுதியில் நடைபெறவுள்ள அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்.
படிக்க | மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை
Advertisement
Advertisement
பிற்பகல் 1.45 மணிக்கு திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கவுள்ளார்.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் திப்ருகரில் உள்ள கானிக்கர் திடலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஆறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அவர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.