‘3 மாநிலங்களில் ஆட்சிக்கு வருவோம்’: மகாராஷ்டிர காங். தலைவர்
பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என மகாராஷ்டிர தலைவர் நானா படோல் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என மகாராஷ்டிர தலைவர் நானா படோல் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க | பஞ்சாப் தேர்தல்: பாஜக கூட்டணி கட்சிகள் எவ்வளவு தொகுதிகளில் போட்டி?
Advertisement
Advertisement
இந்நிலையில் தேர்தல் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் கூறியதாவது:
கோவா, பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.