முகப்பு
இந்தியா

பெங்களூரில் கனமழை: 2 பேர் பலி

பெங்களூரில் பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. புதன்கிழமை காலை 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 18 மே 2022, 12:51 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பெங்களூர்: பெங்களூரில் பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. புதன்கிழமை காலை 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காவிரி மாநிலத்தில் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

உப்கார் லேஅவுட் பேருந்து நிலையம் அருகே உள்ள உபாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையை பெய்தது. பேருந்து நிலையத்தில் 3 பேர் உள்ளே சென்ற நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். கனமழையில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த தேவ்பிரத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் மற்றொரு தொழிலாளி திரிலோக் உயிர் பிழைத்துள்ளார்.

Advertisement

Advertisement

கனமழை இன்னும் 3 நாள்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments